மனைமரத்தில் இருந்து இயற்கையாக கிடைக்கக் கூடிய பதநீரில் ஏராளமான நன்மைகள் குவிந்து கிடக்கின்றன. இது ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும் பானம் மட்டுமல்ல, நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வாரி வழங்குகிறது.
பதநீர் மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம் ஆகும். இனிப்புச் சுவையுடைய இந்த பானம் உடலுக்கு மிகவும் நல்லது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானத்தில் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பனங்கள் எனும் இனிப்பான பானமாகும். கோடைக்காலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி உடல் குளுமையடையும். வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும். மேலும் பதநீரை குடித்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பூ பூக்கும் தருணத்தில் பனைமரம், தென்னை, பனை, கித்துல் என மரங்களின் உச்சியில் உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதில் இருந்து எடுக்கப்படுவதுதான் இந்த பதநீர்.
பதநீரில் உள்ள சத்துக்கள்:
பதநீரில் நார்சத்து, கால்சியம், இரும்புசத்து, துத்தநாகசத்து, வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. இவை ஆரோக்கியமான நகங்கள், முடி மற்றும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. பனை தோலில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் பி, ஆரோக்கியமான தோல், முடி மற்றும் நகங்களை பராமரிக்கும். பல்வேறு உடல் செல்கள் சரியாகச் செயல்படவும் பதநீர் உதவும்.
மேலும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் அருமையான இயற்கை பானமான பதநிரீல் போதுமான அளவு கால்சியம் சத்து இருக்கிறது. வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். ரத்த சோகையை போக்கும் பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளது.
இதய நோய்க்கு பதநீர்:
வைட்டமின் பி சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இருதயத்தை வலுவுள்ளதாக ஆக்கும். பதநீரில் உள்ள கால்சியம் சத்து பற்களை பலப்படுத்தும். இதய நோய் அபாயத்தைக் பதநீரை குடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.இதய செயலிழப்பு மற்றும் பிற இருதய கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது. பதநீரில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது .
தாய்ப்பால் அதிகரிக்க பதநீர்:
பாலூட்டும் பெண்களின் அதிக தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் திறனை இந்த பதநீர் அதிகரிக்கிறது. பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பதநீரில் உள்ளன.
புற்றுநோயை எதிர்க்கும் பதநீர்:
பனை வெல்லத்தில் வைட்டமின் பி2 உள்ளது. வைட்டமின் B2 பொதுவாக ரிபோஃப்ளேவின் என குறிப்பிடப்படுகிறது, இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும். பொருட்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரிக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் இந்த பதநீர் பயன்படுகிறது.
Read More: ஆவணங்கள் இல்லாததால் மார்பகங்களை காட்டிய இளம்பெண்..!! தொட்டுப் பார்த்து அனுபவித்த காவலர்..!!