fbpx

Mohammed Shami: ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய முகமது சமி.! வெளியான பரபரப்பு காரணம்.!

Mohammed shami

Mohammed Shami: இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி ஐபிஎல்(IPL 2024) போட்டி தொடர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் 17 வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் முகமது சமி.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 11 போட்டிகளில் விளையாடிய இவர் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருது வழங்கிய கௌரவித்தது.

உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார் முகமது சமி. அவரது கணுக்கால் காயத்திற்கு சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் லண்டன் சென்றார். இதற்கான பிரத்தியேக ஊசி எடுத்துக்கொண்ட பிறகு மூன்று மாதங்களில் பயிற்சியில் ஈடுபடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் முகமது சமிக்கு வலி குறையவில்லை.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்வது தான் ஒரே தீர்வு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்ற நிலையில் தற்போது மற்றொரு முக்கிய வீரரான முகம்மது சமி காயம் காரணமாக விலகுவது குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாட்டு 28 விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Indian Speedster Mohammed Shami ruled of IPL 2024 with ankle injury. He decided to go for surgery during IPL.

READ MORE: IPL 2024: சென்னையில் முதல் லீக் போட்டி!… தோனி தரிசனத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

Next Post

#BREAKING | நாம் தமிழர் கட்சி சீமானின் மனைவிக்கு புதிய பொறுப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Thu Feb 22 , 2024
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரது மனைவி கயல்விழிக்கு தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அக்கட்சியின் சட்ட ஆலோசகர்களை நியமித்து அறிவித்திருந்தார் சீமான். அப்பட்டியலில் தென்சென்னை மாவட்ட பொறுப்பாளராக கயல்விழியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வழக்கறிஞரான சீமானின் மனைவிக்கு முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More : Education loan […]

You May Like