fbpx

போக்சோவில் கைதான 33 வயது பெண்மணி.! 17 வயது சிறுவனுடன் கள்ளக்காதல்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 17 வயது மாணவனை கூட்டிக் கொண்டு ஓடிய 33 வயது இளம் பெண்ணை காவல்துறை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மகாலட்சுமி(33). இவர் அந்தப் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். சம்பவ தினத்தன்று வேலைக்குச் சென்ற மகாலட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த கணவர் கார்த்திக் தாட்கோ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மகாலட்சுமி வேலை செய்து வந்த அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனும் மாயமாகியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் விசாரித்த காவல்துறை மகாலட்சுமி மற்றும் அந்த சிறுவன் கன்னியாகுமரி சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

கன்னியாகுமரி விரைந்த விருதுநகர் போலீசார் அந்த சிறுவனையும் மகாலட்சுமியையும் காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மகாலட்சுமியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

"என் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக என்னால் இருக்க முடியவில்லை." கல்லூரி மாணவர் தற்கொலை.!

Mon Jan 30 , 2023
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து இருந்தார். கடந்த சில நாட்களாகவே சுமித்ரன் […]

You May Like