fbpx

நீட் தேர்வு ரத்து..!! மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து..!! ஐகோர்ட்டில் முறையீடு..!!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில்மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை ஜனாதிபதிக்கு அனுப்பும் திட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறும் இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், இதில் கையெழுத்திடுமாறு பள்ளி மாணவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், இதுதொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, ல‌ஷ்மி நாராயணன் அமர்வு விடுமுறை முடிந்த பின்னர், தலைமை நீதிபதி அமர்வில் முறையிடுமாறு அறிவுறுத்தினர்.

Chella

Next Post

'இது இந்த உலகத்தோட தப்பு’..!! ’அதனால தான் இங்க நிக்குறேன்’..!! அனல் பறக்கும் பிக்பாஸ் டாஸ்க்..!!

Thu Oct 26 , 2023
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராங்கிங் டாஸ்க் நடைபெறுகிறது. அதில் முதலாவது நிலை டைட்டில் வின்னருக்கான ராங் ஆகவும் 15-வது ராங் எலிமினேஷாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த போட்டியில் போட்டியாளர்கள் அனைவருமே பங்கு பெறுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் ஒவ்வொரு இடத்தில் நிற்கின்றனர். […]

You May Like