fbpx

மீண்டும் ஒரு உயிரை பலி வாங்கிய நீட் தேர்வு..! தொடர் தோல்வியால் மாணவன் தற்கொலை…!

சென்னை குரோம்பேட்டை, குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பிரிவில் பிளஸ்-2 படித்த ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று ‘ஏ’ கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வுக்காக தனியார் பயற்சி மையத்தில் முறையாக பயிற்சி ஏடுத்தார், அனால் தொடர்ந்து இருமுறை நீட் தேர்வு எழுதியும் இவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் மூன்றவது முறை தேர்வு எழுதுவதற்காக, அண்மையில் நீட் பயிற்சி மையத்துக்கு ஆன்லைனில் பணம் கட்டியுள்ளார். 2 முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத விரக்தியில் இருந்த மாணவர் ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிட்லப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Kathir

Next Post

மீண்டும் சிறப்பு முகாம்...! மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் மட்டும்...!

Mon Aug 14 , 2023
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பதிவு செய்ய ஆகஸ்ட் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் . இது குறித்து அமைச்சர் பெரியசாமி தனது செய்தி குறிப்பில்; 22.07.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான […]
மகளிர் உரிமைத்தொகை திட்டம்..!! உங்களுக்கு ஏதேனும் சந்தேகமா..? விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியீடு..!!

You May Like