fbpx

நேரு உள்விளையாட்டு அரங்கில்; ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வந்த சூழ்நிலையில் அங்கு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார் துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டார். திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அங்கிருந்த சக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த காவலர் செந்தில் குமாரின் உடலை மீட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு, உடற்கூறு ஆய்விற்கு காவல்துறையினர், அனுப்பி வைத்தனர். மேலும் செந்தில்குமாரின் தற்கொலைகு என்ன காரணம், என்பது குறித்து காவல்துறையினர், தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி..! டிராய் தலைவர் யாருக்காக இதை செய்தார்..? ஆ.ராசா குற்றச்சாட்டு

Wed Aug 3 , 2022
5G அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடைபெற்றுவதாக திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றையை டிராய் என கூறப்படும் ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தபோது, 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என வினோத் ராய் கூறினார். ஆனால், இன்று 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிகப்பெரிய […]

You May Like