fbpx

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! மக்களே அலர்ட்..!!

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 10) தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

மறுபடியும் முதல்ல இருந்தா.! தமிழகத்தை மீண்டும் மிரட்ட வரும் கனமழை.! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை.!

Wed Jan 10 , 2024
கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தை கனமழை பாடாய்படுத்தி வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக பகுதிகளுக்கு தொடர்ந்து வானிலை எச்சரிக்கை வந்து கொண்டிருப்பது பொதுமக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]

You May Like