fbpx

திடீர் திருப்பம்.. நெல்லை காங்கிரஸ் தலைவர் மரண வாக்குமூலம்…! மாவட்ட காவல்துறை புதிய தகவல்..!

கடந்த 30-ம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரண வாக்கு மூலம் என்ற பெயரில் புகார் மனு திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்ததாக கூறி சமூக வலைத்தளத்தில் பரவி வரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை வெளியிட்ட மறுப்பு அறிக்கையில்; கடந்த 03.05.2024 அன்று ஜெயக்குமார் தனசிங் மகனான கருத்தையா ஜெஃப்ரின் என்பவர் உவரி காவல் நிலையம் சென்று தனது தந்தையை காணவில்லை என புகார் மனு அளித்ததன் அடிப்படையில் உவரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடனடியாக 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., அவர்கள், விசாரணையை துரிதப்படுத்தினார், புகாரளிக்க வந்த போது தான் தனது தந்தையின் அறையில் இருந்ததாக குறிப்பிட்டு ஒரு கடிதத்தை ஆஜர் செய்தார். அக்கடிதத்தில் 30.04.2024 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அக்கடிதம் புகாரளித்த போது தான் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு யாரிடமும் புகார் அளிக்கவில்லை. விசாரணை தொடர்ந்த போது 04.05.2024 காலை அவரது தோட்டத்தில் எரிந்து நிலையில் பிணமாக கிடந்ததையெடுத்து, அவரது உடல் மீட்கப்பட்டு வழக்கினை துரிதப்படுத்தும் வகையில் அனைத்து அறிவியல் பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

புதிய ரெக்கார்டு!… தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ஜடேஜா!

Mon May 6 , 2024
Jadeja: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்து ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார். தரம்சாலாவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 […]

You May Like