fbpx

நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு … 13 பேர் பலி , பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை..

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை  என கூறப்பட்டுள்ளதால் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

நேபாளத்தின் அச்சாம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அச்சாம் மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 10 பேரை தேடும் பணியில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தின் தார்ச்சுலா மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் மாயமானார்கள். அவர்களையும் ராணுவ குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழையால் அவ்வப்போது மீட்புபணிகள் பாதிக்கப்படுகின்றது. மகாகளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் இரண்டு பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றது. காயமடைந்த நிலையில் 7 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது . மேலும் பலர் காணவில்லை எனவும் அடுத்தடுத்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது. 

Next Post

ஜெயிலர் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. என்ன காரணம் தெரியுமா..?

Sat Sep 17 , 2022
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. து.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.. மேலும் ரஜினியின் புதிய லுக் போஸ்டரையும் வெளியிட்டது.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.. மேலும் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த தகவல் உறுதியாகும் […]

You May Like