வட இந்தியாவை தன்னுடைய பிறப்பிடமாகக் கொண்ட பானிபூரி பின்னாளில் இந்தியா முழுமைக்கும் தன்னுடைய ரசிகர்களை பெருக்கிக் கொண்டது. மொறுமொறுவென இருக்கும் பூரிக்குள் வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு புளிப்பும், காரமும் சேர்ந்த மசாலா தண்ணீர் ஆகியவை சேர்த்து வழங்கப்படும் பானி பூரியை அதன் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா வெங்காயம் வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுபவர்களின் முகத்திலேயே அந்த பாணி பூரியின் சுவை வெளிப்பட்டுவிடும்.
இன்றளவும் இந்தியாவில் பானி பூரியை விரும்பாத சிறுவர்களும் இருக்க முடியாது, பெரியவர்களும் இருக்க முடியாது. இப்படி அனைத்து தரப்பினரையும் தன்னுடைய ஹதீஸ் நவீன சுவையால் காட்டி போட்டு இருக்கிறது வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பாணி பூரி.
இப்படி பானிபூரியின் மீது தீராத விருப்பம் கொண்ட ரசிகர்களின் மனதை துன்பப்படுத்தும் விதத்தில், குஜராத் மாநிலத்தில் ஒரு பாணி பூரி விற்பனையாளர் ஒரு செயலை செய்திருக்கிறார்.
அவர் தன்னுடைய பானிபூரியில் உருளைக்கிழங்கு பதிலாக வாழைப்பழத்தை வைத்து புதியதோர் செயல்முறையை முயற்சித்து வருகின்றார். வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்து வலைதளவாசிகள் என்னடா இது பானி பூரிக்கு வந்த சோதனை என்று புலம்பித் தள்ளி வருகிறார்கள்.