fbpx

முதலிரவு காட்சியை வீடியோ எடுத்த புதுமாப்பிள்ளை..!! சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் வந்த சிக்கல்..!!

ஆந்திர மாநிலம் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் கத்ரேனிகோனா மண்டலத்தில் உள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு இருவீட்டு குடும்பத்தாரும், புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வாலிபர் தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனைப் பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மருமகனை தட்டிக்கேட்டுள்ளனர்.

இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்திற்கு வந்தது. அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் இருதரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்ய முயற்சி செய்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க விடாமல் தடுத்துள்ளனர். இருப்பினும் பெண் வீட்டார் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புதுமாப்பிள்ளையை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்து மனைவியுடன் குடும்பம் நடத்த வேண்டிய வாலிபர், முதலிரவு காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

2-வது நாளாக வெளியேறிய கரும்புகை..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சரவணா ஸ்டோரில் பரபரப்பு..!!

Thu Mar 2 , 2023
மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 10 மாடி கொண்ட சரவணா ஸ்டோர்ஸ் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. கடையின் 9-வது தளத்தில் உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் கடை ஊழியர்களும், கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்களும் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். அப்போது வெளியேறிய கரும்புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். […]
2-வது நாளாக வெளியேறிய கரும்புகை..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சரவணா ஸ்டோரில் பரபரப்பு..!!

You May Like