fbpx

நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! கொட்டித் தீர்க்க போகும் மழை..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் தென் தமிழகம் என அனைத்து பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியே தமிழகத்தில் இந்த மழை பொழிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் நாளை 17ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’எல்லாமே ரிவேஞ்ச் தான்’..!! ஸ்கெட்ச் போடும் மாயா, பூர்ணிமா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ்..!!

Mon Oct 16 , 2023
விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் வினுஜா, மாயா, பூர்ணிமா எல்லோரும் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மாயா, இங்க எல்லாமே ரிவேஞ்ச் கேம் தான். விஷ்ணு எல்லார் கிட்டையுமே சண்டை போட்டிருக்கிறார். அதனால விஷ்ணுவை எல்லோரும் நாமினேட் பண்ணுவாங்க என்று சொல்கிறார். அப்போது பூர்ணிமா பிரதீப்புக்கும் […]

You May Like