fbpx

இஸ்ரேல் போரால் இந்திய மக்களுக்கு வரும் புதிய சிக்கல்..!! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. தொடர் ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு காரணமாக காசா நகரில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உணவு, மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்டவை இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு உதவ தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காசா மீதான குண்டுவெடிப்பு நிறுத்தப்படாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

உலகில் எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள கத்தார், உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடாகவும் உள்ளது. கத்தாரின் இந்த அதிரடி முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவுக்கு வந்தால், அது பெரும் பொருளாதார நெருக்கடியை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை...! எங்கு சென்று விண்ணப்பிப்பது...? முழு விவரம்

Fri Oct 13 , 2023
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், […]

You May Like