fbpx

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் புதிய நடைமுறை அமல்..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலம் தங்குவதற்கான அறைகள் மற்றும் லட்டு பிரசாதம் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனை தடுக்க தற்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் லட்டு பிரசாதம் வாங்குவது, தங்கும் அறைகளை பெறுவது ஆகியவற்றுக்காக கவுண்டர்களுக்கு செல்பவர்கள் அந்த வாரத்தில் எத்தனை முறை வந்துள்ளனர் என்று தெரிந்து கொள்ள முடியும். இந்த புதிய தொழில்நுட்பத்தை இன்று (மார்ச் 1) முதல் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

Chella

Next Post

தொடரை வெல்லுமா இந்தியா..? இன்று 3-வது டெஸ்ட் போட்டி..!! ஆஸ்திரேலியாவுடன் மோதல்..!!

Wed Mar 1 , 2023
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சுழலில் ஆஸ்திரேலிய அணியை திணறடித்து வருகின்றனர். தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால், வெற்றி […]

You May Like