fbpx

தமிழ்நாட்டில் பீடி, சிகரெட் விற்பனை செய்ய புதிய நடைமுறை..!! மீறினால் என்ன ஆகும் தெரியுமா..? முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில் பீடி மற்றும் சிகரெட்டை விற்பனை செய்ய முடியாது. முறையாக உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.

அதனைப் போலவே அந்த கடைகளில் பீடி மற்றும் சிகரெட்டை தவிர்த்து வேறு எதையும் விற்கக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பீடி மற்றும் சிகரெட் விற்பனையை குறைக்க முடியும் என்பதால் இன்று சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Chella

Next Post

மக்களே கவனம்..!! ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்..!! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! அரசு அறிவிப்பு..!!

Wed May 31 , 2023
தமிழ்நாட்டில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்த ரேஷன் கார்டு அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. இதற்கிடையே, ஆதார் கார்டு […]
ரேஷன் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

You May Like