fbpx

வாகன ஓட்டிகளுக்கு புது வேக கட்டுப்பாடு..! இனி இதை தாண்டினால் அபராதம்..! அமலுக்கு வந்த விதிமுறை..

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் நிகழும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரி பொதுநிர்வாகதுறையின் மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 112ன் கீழ் அதிகபட்ச வேக வரம்புகளை நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. அதன் படி புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட வேகத்தை மீறும் வாகனங்களை ஸ்பீடு மீட்டர் மூலம் வேகத்தை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Kathir

Next Post

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையும் பெறலாம்!… மத்திய அரசு தகவல்!

Mon Sep 4 , 2023
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கான சேவைகளும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எலும்பு மஜ்ஜை சார்ந்த பாதிப்புகளும், நோய்களும் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த நோய்க்கு ஆளாகின்றனர். எலும்பு மஜ்ஜை என்பது, உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை இருக்கிறது.அதிலிருந்துதான், ரத்த அணுக்கள் உருவாகின்றன.ஸ்டெம் செல்கள் அங்கிருந்து உருவாகி அதிலிருந்து ரத்த சிவப்பு அணுக்கள் […]

You May Like