fbpx

விராட் கோலி கையில் புதிய டாட்டூ!… 14 மணிநேரமாக போடப்பட்ட ரகசியம்!… டாட்டூ கலைஞர் விளக்கம்!

விராட் கோலியின் கையில் போடப்பட்டுள்ள புதிய டாட்டூவில் அடங்கியுள்ள ரகசியம் குறித்து டாட்டூ கலைஞர் விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி தனது கையில் புதிய டாட்டூவை குத்தியுள்ளார், இந்த டாட்டூவை முடிக்க டாட்டூ கலைஞருக்கு கிட்டதட்ட 14 மணிநேரம் ஆகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாட்டூ கலைஞர் தெரிவித்ததாவது: இந்த டாட்டூ விராட் கோலி ஆளுமையின் ஒரு அம்சத்தை பிரதிபலிக்கிறது. கோலியின் டாட்டூகளை விளையாட்டு ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள புதிய டாட்டூவும் ரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்டு வருகிறது. மேலும், சமூக வலைத்தளங்களில் இதை பற்றியே அதிகமாக பேசி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய ஏலியன்ஸ் டாட்டூவின் உரிமையாளரும், கலைஞருமான சன்னி பானுஷாலி, கடந்த சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி புதிய டாட்டூ டிசைன் படங்களுடன் வந்து என்னை சந்தித்தார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி எங்கள் பணியின் ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. புகழின் உச்சியில் இருந்தாலும் விராட் கோலியின் கால்கள் எப்போதும் தரையில்தான் உள்ளது. அவருக்குப் பெருமையோ, அகந்தையோ கிடையாது. இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இருந்தும், விராட் கோலி அடக்கமாக இருக்கிறார்…எங்கள் பணியை பாராட்டினார். அவருடைய அடுத்த டாட்டூவில் நான் வேலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.” என்றார்.

மேலும், ஐபிஎல் உள்ளிட்ட விராட் கோலியின் பிஸி ஷெட்யூல் காரணமாக பல நாட்களாக டாட்டூவை அவரால் குத்த முடியவில்லை. விராட் கோலியின் அந்த டாட்டூவானது ஆன்மீகத்தின் மீதான அதிக சாயலில் இருந்தது. அந்த டாட்டூ ஆன்மாவை இணைக்கும் டாட்டூவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக முழுத் திறனுடன் உழைக்க வேண்டியிருந்தது. மேலும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது. பச்சை குத்துவதற்கு 14 மணிநேரம் ஆனது. இந்த காலகட்டத்தில் ஸ்டுடியோ முற்றிலும் மூடப்பட்டது. மேலும் அனைத்து பாதுகாப்புடன் அதை செய்தோம். டாட்டூ குத்திய பிறகு, புதிய டாட்டூவை விராட் ஆச்சரியத்துடன் பார்த்தார். நன்றாக உள்ளது” என்று என்னிடம் தெரிவித்தார்.

மேலும் பேசிய டாட்டூ கலைஞர் பானுஷாலி, “ தற்போது போடப்பட்டுள்ள இந்த டாட்டூ தனது தனது வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்கும் என்றும், அவரது ஆன்மீக பயணத்தின் சக்திவாய்ந்த சின்னம் மற்றும் தன்னை விட பெரிய ஒன்றுடனான தொடர்பு என்று விராட் கோலி குறிப்பிட்டார்” என்றார். விராட் கோலி மிகப்பெரிய டாட்டூ விரும்பி. அதனால் இவரது தனது உடலில் பெற்றோர்களின் பெயர்கள், அவரது ராசி அடையாளங்கள், அவரது ஒருநாள் அறிமுக கேப் எண், அவரது டெஸ்ட் அறிமுக கேப் எண் உள்ளிட்டவைகள் டாட்டூ குத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை!... கிரண் ரிஜிஜு!

Fri Apr 7 , 2023
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் விவரங்களை இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் இணைக்காதவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது எனவும் மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியளித்துள்ளார். ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக்( […]

You May Like