fbpx

மீண்டும் பரவும் நிபா வைரஸ்..!! இருவர் மரணம்..!! சுகாதாரத்துறை அலெர்ட்..!! பீதியில் மக்கள்..!!

கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல் வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த நிலையில், அவர்கள் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் 75 பேரை கண்காணித்து வருவதாகவும் என்றும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மரணத்திற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருப்போம் என்றும் இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Chella

Next Post

”எங்களுக்கு பெரிய தொல்லையா இருக்கு”..!! தமிழக அரசை சாடிய கர்நாடக முதல்வர்..!!

Tue Sep 12 , 2023
தமிழ்நாடு அரசு தேவையற்ற தொல்லை தருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார். கர்நாடகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, ”தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க மேகதாது அணை கட்டுவதே தீர்வாக அமையும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அணையை தமிழ்நாடு எதிர்க்க எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார். வழக்கமாக தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தரப்படுவதாகவும், மழை இல்லாத காலங்களில் குறைவான […]

You May Like