ஆந்திராவில் இளம்பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய முயன்ற போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.
ஆந்திரா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டூர் பகுதியில் சிறுமிகளை அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்ததாக கூறி ஒரு லட்சம் தருகிறோம் என கூறிய பதினைந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ரேணிகுண்டா பகுதியில் உடல் ஆரோக்கியம் சரியாக இளம் பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்வதாக கூறி போலீ சாமியார் ஒருவர் அந்த பெண்ணின் பெற்றோரிடம் 20 ஆயிரம் ரூபாய் பேரம் பேசியுள்ளார்.
அப்போது பூஜையின் போது அந்த பெண்ணின் ஆடைகளை கழட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால், பயந்துபோன அப்பெண் அங்கிருந்து தப்பித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அங்கிருந்த போலி சாமியார் அமீரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.