fbpx

யாருடனும் கூட்டணி இல்லை..!! தேர்தலில் தனித்து போட்டி..!! சீமான் அறிவிப்பு..!!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.

தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். இலவசங்களை, வளர்ச்சி திட்டங்கள் என்று கூற முடியாது. 9 லட்சம் கடன் சுமை என்கிறார்கள். அதை எப்படி வளர்ச்சித் திட்டங்களாக காட்டுவது..?

தமிழ்நாட்டில் அரசு விற்பனை செய்தால் அது நல்ல சாராயம், மக்கள் தயாரித்து விற்பனை செய்தால் அது கள்ளச்சாராயம். இது மோசமான ஆட்சி முறை. மதம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது. நானே கருவறையில் மணி ஆட்டி பூஜை செய்திருக்கிறேன். பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மீகத்திற்கு பேரிழப்பு.

ஆளுநருக்கு சங்கரய்யா யார் என்று தெரியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு என்ன மரியாதை? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு மட்டும் எங்கிருந்து வந்தது? ஆளுநர் பதவியே தேவையில்லாதது. நீட் தேர்வில் தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டீர்களா? காங்கிரஸ் கையெழுத்திட்டது, பாஜக வளர்த்திருக்கிறது. இந்த கொடுமையை என்ன செய்வது? பிரதமர் மோடி எதைப் பற்றியும் பேசமாட்டார். மன் கி பாத்தில் கதவை சாத்திக்கொண்டு பேசுவார்’ என்று தெரிவித்தார்.

Chella

Next Post

இது 9-வது முறை..!! செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு..!!

Fri Oct 20 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக 8 […]

You May Like