fbpx

Senthil Balaji | செந்தில்பாலாஜி மீது இன்று குற்றச்சாட்டு பதிவு இல்லை!!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒவ்வொரு முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று பிற்பகல் உணவுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை நலிவடைந்துள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதாக அவர் கூறிய நிலையில் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது ஒருபுறமிருக்க செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ஜூலை 29-க்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண மோசடி வழக்கில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், குற்றச்சாட்டு பதிவை ஒத்திவைக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததை ஏற்று, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more ; ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை நோட் பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

No charges against Senthilbalaji today

Next Post

பட்டப்பகலில் பயங்கரம்..!! நடுரோட்டில் கீழே தள்ளிவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

Mon Jul 22 , 2024
The police department has arrested a man who attempted to rape a woman who was walking on the road in Salem and is investigating.

You May Like