fbpx

“வற்புறுத்தக்கூடாது”!… மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடு!… மத்திய சுகாதார அமைச்சகம்!

மருத்துவமனைகளில் உள்ள, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பதற்கு பல புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயாளி அல்லது நெருங்கிய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், ஐ.சி.யு.,வில் சேர்க்க வற்புறுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அடுத்ததாக வேறு சிகிச்சை இல்லை அல்லது சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், நோயாளியை, ஐ.சி.யு.,வில் சேர்க்கக் கூடாது. அதுபோல, நோய் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ள, பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், ஐ.சி.யு.,வில் சேர்க்கக் கூடாது.

மேலும், ஐ.சி.யு., தொடர்பாக மனரீதியில் அல்லது கொள்கை ரீதியில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள், அதில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தாலும், ஐ.சி.யு.,வில் சேரும்படி மருத்துவமனைகள் நெருக்கடி தரக் கூடாது. பெருந்தொற்று, பேரிடர் காலங்களில், மருத்துவமனையில் உள்ள வசதிகளின் அடிப்படையில், முன்னுரிமை அடிப்படையிலேயே, நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். உடல் உறுப்பு செயலிழந்தது அல்லது அது செயல்பட மருத்துவ வசதி தேவை அல்லது நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது போன்ற சூழ்நிலைகளில் தான், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும்.

மூச்சுத் திணறல் பிரச்னை, நோய் தீவிரமாவது, தொடர் கண்காணிப்பு தேவை, செயலிழக்கும் உடலுறுப்புகளை மேம்படுத்த சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கலாம். இதய செயல்பாட்டில் மாறுபாடு ஏற்படுதல், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கலாம். தீவிர சிகிச்சைப் பிரிவில் உரிய இடமில்லாமல் காத்திருக்கும், அதே நேரத்தில் அங்கு சிகிச்சை தேவைப்படுவோருக்கு, ரத்த அழுத்தம், நாடி, சுவாச அளவு, இதயத்தின் செயல்பாடு, உடலில் ஆக்சிஜனின் அளவு, சிறுநீர் வெளியேற்றும் அளவு உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Kokila

Next Post

நீங்க பெத்த பிள்ளைகளாகவே இருந்தாலும் இந்த விஷயத்தில் கவனம்..!! இல்லைனா சாப்பாட்டுக்கே கஷ்டப்படணும்..!!

Fri Jan 5 , 2024
வயதான காலத்தில் பிள்ளைகள் ஏமாற்றினால், அவர்களிடம் சொத்தை பறிகொடுத்தால், நிச்சயம் சட்டம் உங்களைக் காக்கும். இதுபற்றி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவினையும், பெற்றோர்கள் சொத்தை எழுதி கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களையும் இந்தப் பதிவில் பார்க்கலாம். சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், ”பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007 பிரிவு 23 இன் படி, அடிப்படை வசதிகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் ஒரு […]

You May Like