fbpx

முட்டை, விந்தணு இல்லை!… ஸ்டெம்செல்கள் மூலம் செயற்கை மனிதக்கரு உருவாக்கம்!

முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனிதக்கருக்களை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

மனித இனப்பெருக்கத்திற்கு தற்போது இன் விட்ரோ கருத்தரித்தல் (IVF) பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது ஆணின் விந்தணு, பெண்ணின் முட்டை இரண்டையும் எடுத்து சேர்த்து, இன்குபெட்டரில் வளர்த்து கருவானவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பையில் வைக்கின்றனர். இப்படி ஒரு கரு மட்டும் வைப்பதில்லை. நான்கைந்து சேர்த்து ஒரே நேரத்தில் பெண்ணின் கருவில் வைப்பார்கள். அப்படி வைக்கப்படும் செயற்கை கருக்கள் கர்ப்பபையில் வளர்ந்து குழந்தையாக பிறக்கிறது. இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் ஒரே முயற்சியில் கருத்தரித்து விடுவார்கள் என்று கூறிவிட முடியாது. சிலருக்கு ஆகாமலேயே போகலாம், சிலருக்கு ஒரே முயற்சியில் கருத்தரித்துவிடுவார்கள்.

இந்த செயற்கை கருத்தரிப்புக்கு தற்போது அதிகளவில் வரவேற்பு இருக்கிறது. கணவருடன் பிரிந்து பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் இந்த முறையில் குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். இது இயற்கைக்கு முரணானது என்று ஒருபக்கம் வாதிடுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், மற்றொரு பக்கம் இல்லை இதுவும் இயற்கைதான் என்கின்றனர். ஆனால் தற்போது சிந்தடிக் கரு உருவாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை மனித கருக்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையிலான மனித கருக்களை உருவாக்க முட்டை மற்றும் விந்தணுக்களின் தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட இதற்கு துடிக்கும் இதயம் அல்லது மூளை உருவாக்கம் இல்லை. இருப்பினும், அவை நஞ்சுக்கொடி, மஞ்சள் கரு மற்றும் கருவை உருவாக்கும் செல்களைக் கொண்டுள்ளன. மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான உயிரியல் காரணங்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு இந்த சிந்தடிக் செயற்கை கரு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏப்ரல் 2021-ல் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகளவில், ஆண்டுதோறும் 23 மில்லியன் கருச்சிதைவுகள் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆகஸ்ட் 31 முதல் ஆசிய கோப்பை தொடர்!... பாகிஸ்தானில் 4 போட்டிகள்!... முழுவிவரம் இதோ!

Fri Jun 16 , 2023
2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் மீதம் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றனர். இந்த […]
ஆசிய கோப்பை..!! பொருளாதார நெருக்கடி.!! திடீர் மாற்றம்..!! வெளியான முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like