அஸ்ஸாம் அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பள்ளி ஆசிரியர்கள் ஒரு சிலர் முகம் சுழிக்கும் வகையில் ஆடைகளை உடைத்து பள்ளிக்கு வருவதால் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தடை செய்யப்பட்ட ஆடைகளில், ஆண் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கான டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ், பெண் ஆசிரியர்களுக்கான லெக்கின்ஸ் ஆகியவை அடங்கும். அனைத்து ஆசிரியர்களும் “சுத்தமான, அடக்கமான மற்றும் கண்ணியமான ஆடைகளை நிதானமான வண்ணங்களில் அணிந்திருக்க வேண்டும்.
ஆடையின் நிறம் முகம் சுழிக்கும் பளிச்சென்று தோன்றக்கூடாது” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சாதாரண மற்றும் பார்ட்டி ஆடைகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்” என்று அரசு தெரிவித்துள்ளது.