fbpx

’எத்தனை முறை சொன்னாலும் அடங்க மாட்டியா’..? மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!! வாலிபர் துடிதுடிக்க வெட்டிக்கொலை..!!

திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 27). இவர் நேற்று குறிச்சிகுளம் பகுதியில் நெல்லையில் இருந்து மதுரை செல்லும் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையப்பனை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில், தலை துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையப்பன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெள்ளையப்பனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளையப்பன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இதனை பெண்ணின் கணவர் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்காதலியை வெள்ளையப்பன் வெளியூர் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இக்கொலையை திட்டமிட்டு செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் (22), நாகராஜன் (20), கரையிருப்பை சேர்ந்த மூக்கன், தமிழ்செல்வன் (19), பாண்டி (22), சிதம்பரம் நகரை சேர்ந்த பேச்சிராஜா (23), செல்வ கணபதி (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருமணமான பெண்ணுடன் தவறான உறவு வைத்திருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ராட்சசன் பட பாணியில்.. பிளாஸ்டிப் பையில் கிடந்த சிறுமியின் சடலம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Thu Jan 26 , 2023
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் அம்பாவரம் எனும் கிராமத்தில் கடந்த 2021 இல் சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்து போலீசாரால் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலானது மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தகைய நிலையில், சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை […]

You May Like