fbpx

’இனி இந்த விலையில் 4ஜி போன்கள் கிடைக்காது’..!! விற்பனைக்கு தடை..!! மத்திய அரசு அதிரடி..!!

இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று செல்போன் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முற்றிலும் 5ஜி விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சக அதிகாரிகள், அடுத்த 3 மாத காலத்திற்குள் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அந்த சேவைக்கான சப்போர்ட் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள சாம்சங், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களின் 5ஜி சாதனங்களில் 5ஜி சேவைக்கான சப்போர்ட் கிடைக்காத நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இனி இந்த விலையில் 4ஜி போன்கள் கிடைக்காது’..!! விற்பனைக்கு தடை..!! மத்திய அரசு அதிரடி..!!

இந்தியாவில் கடந்த 1ஆம் தேதி பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மாற்று ஏர்டெல் சார்பில் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தரவுகளின் படி, நாட்டில் மொத்தம் 750 மில்லியன் செல்போன் பயனர்கள் உள்ளனர். அதில், சுமார் 350 மில்லியன் பயனர்கள் 3ஜி அல்லது 4ஜி சேவை உள்ள போன்களை பயன்படுத்தி வருகின்றனர். 100 மில்லியன் பயனர்கள் 5ஜி ரெடி போன்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் 5ஜி சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

’சத்யாவை ஏற்கனவே 2 முறை கொல்ல முயன்றேன்’..!! கைதான முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

Fri Oct 14 , 2022
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா (20). இவர், தியாகராய நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரிக்கு செல்வதற்காக மதியம் 1.15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது […]
’சத்யாவை ஏற்கனவே 2 முறை கொல்ல முயன்றேன்’..!! கைதான முன்னாள் காதலன் பரபரப்பு வாக்குமூலம்..!!

You May Like