fbpx

’இனி கூட்டணி கிடையாது’..!! ’யார் தயவும் எங்களுக்கு தேவையில்லை’..!! எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு..!!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவும் தேர்தலை சந்திக்க அதிரடியாக தயாராகி வருகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு சிறுபான்மை கட்சிகளும் முன்வந்துள்ளன.

இந்த கட்சிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தோழமை கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி பதவிகளிலும் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய அவர், “அதிமுக எக்காரணத்தை கொண்டும் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்காது. இதை சிறுபான்மை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. நமக்கு யார் தயவும் தேவையில்லை. நாம் பார்க்காத வெற்றி இல்லை. இன்றைய நிலை மாறும். அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

’தமிழ்நாட்டிற்கு பாஜகவே தேவையில்லை’..!! ’கூட்டணி முறிந்துள்ளதை யாரும் நம்பவில்லை’..!! கருணாஸ் தாக்கு..!!

Tue Oct 17 , 2023
தருமபுரி மாவட்டம் அரூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், “வருகிற 27ஆம் தேதி மருது சகோதரர்கள் நினைவை போற்றும் வகையிலும், 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வருகிறது. இதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்கின்ற வகையில், சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பலமுறை நான் சட்டமன்றத்தில் வலியுறுத்தியதை, பீகார் மாநிலத்தை போன்று, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 20,000 நாட்கள் […]

You May Like