fbpx

வேற யாரும் நெருங்க முடியாது!… உலகிலேயே அதிக சக்திவாய்ந்த பேட்ஸ்மேன் தோனிதான்!… CSK பயிற்சியாளர்!

Dhoni: உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனாக தோனி மாறி இருக்கிறார். வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு அருகில் கூட வர முடியாது என்று சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும், அது சேப்பாக்கம் மைதானம் போல மகேந்திர சிங் தோனியால் மாறிவிடுகிறது. அவர் பேட்டிங் செய்ய எத்தனை பந்துகள் மீதம் இருந்து வந்தாலும், மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்கிறது. அவர் பேட்டிங் செய்ய வருகின்ற பொழுது எல்லா மைதானங்களிலும் காதுகளால் உள்வாங்க முடியாத அளவுக்கு சத்தம் ரசிகர்களால் எழுகிறது.

இந்தநிலையில், இன்று(ஏப்ரல் 28) நடக்கும் 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ஐதராபாத்தை பழித்தீர்க்கவேண்டும் என்ற முனைப்பில் சென்னை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், “உலகிலேயே மிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேன் தோனி தான்” என்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வலைப் பயிற்சிக்கு முன்பு வரை அவர் பேட்டை கூட தொடவில்லை. தோனி வேறு எந்த கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவில்லை. ஆனாலும், ஐபிஎல் தொடருக்கு சரியாக தன்னை தயார் செய்து கொண்டுள்ளார். அவர் நீண்ட நேரம் பயிற்சி செய்கிறார்.

அதில் அதிரடியாக ஷாட் அடிப்பதே அவரது முக்கிய பயிற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளைப் பார்க்கும் போது தோனி அதிக சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். அதாவது உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த அதிரடி பேட்ஸ்மேனாக மாறி இருக்கிறார். வேறு எந்த பேட்ஸ்மேனும் அவருக்கு அருகில் கூட வர முடியாது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது சென்னை அணி. இந்த போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து இருந்தாலும் எம்.எஸ்.தோனியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது. அதாவது 16 பந்துகள் களத்தில் நின்ற தோனி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 37 ரன்களை விளாசி இருந்தார்.

அதேபோல், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார் எம்.எஸ்.தோனி. இந்த போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கிய அவர் வெறும் 4 பந்துகளில் 3 சிக்ஸர்களை விளாசி 20 ரன்கள் எடுத்தார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த போட்டியில் கடைசி 9 பந்துகளுக்கு களம் இறங்கிய தோனி 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 28 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இந்த வருட ஐபிஎல் தொடரும் மகேந்திர சிங் தோனியை சுற்றியே அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Readmoe: சோபோர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தகவல்!

Kokila

Next Post

ஆசிரியர் தேர்வு வாரியம் குட் நியூஸ்...! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...! முழு விவரம்

Sun Apr 28 , 2024
விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 29.04.2024 லிருந்து 15.05.2024 மாலை 5.00 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு […]

You May Like