fbpx

’யாருமே எதிர்பார்க்கல’..!! மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! ஊழியர்கள் அதிர்ச்சி..!!

தினசரி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்தும், வார விடுமுறையை 3 நாட்களாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது தினசரி 8 மணி நேர வேலையும் வாரத்திற்கு சனி, ஞாயிறு என இரண்டு நாள் விடுமுறையும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையை மாற்றிட மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இனி வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, ஊழியர்கள் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் வரை என 4 நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மீதமுள்ள மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது.

காலம் காலமாக எட்டு மணி நேர வேலைக்கு பழகியுள்ள இந்திய தொழிலாளர்கள் இதனை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறைக்கு நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் வரவேற்பு கொடுப்பார்களா? அல்லது இதற்கு எதிர்ப்புகள் கிளம்புமா? என்பது மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர்தான் தெரிய வரும்.

Chella

Next Post

மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டம் தொடக்கம்...!

Wed Jan 31 , 2024
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் மாநிலங்களின் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் அலுவலகங்களில் கணினிமயமாக்கல் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர்; டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், டிஜிட்டல் ஒத்துழைப்பு மூலம் கிராமங்களை சென்றடையத் தொடங்கியுள்ளது. தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றின் கணினிமயமாக்கல் தொடங்கி ஒட்டுமொத்த […]

You May Like