fbpx

திமுகவில் படித்தவர்கள் யாரும் இல்லை … ஜே.பி. நட்டா கருத்துக்கு பதிலடி கொடுத்த பி.டி.ஆர்.

   ஒருவேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த பொலிடிகல் சையின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் எனசொல்லியிருப்பார் ஜே.பி.நட்டா என பி.டி.ஆர். பதிலடி கொடுத்துள்ளார்.

தி.மு.கவில் படித்த தலைவர்கள் இல்லை அதனால்தான் நீட் தேர்வையும் தேசிய கல்வி கொள்கையையும் எதிர்க்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாட்டின் காரைக்குடிக்கு வந்தார். அதில் அவர் பேசுகையில் , திமுக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாககேள்விபட்டேன். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகஇருந்தபோது அவர்கள் நீட்டை எதிர்த்தனர். திமுகவில் யாரும் படித்த தலைவர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் நீட்டை எதிர்க்கின்றனர். என அவர் கூறியிருந்தார்.

இதனிடையே திமுக தலைவர்களின் கல்வித் தகுதியை அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில், ’’2 நாடுகளில் 3 பல்கலைக்கழகங்களில் 4 வெவ்வேறு படிப்புகளில் சர்வதேச தரத்தில் பல தேர்வுகளை எழுதி 4 பட்டங்கள் பெற்ற எனக்கு கல்வி தகுதி இல்லை’’பிரதமர் மோடி பொலிடிகல் சயின்ஸ் பாடப்பிரிவில்  பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார் ’’ என பதிவிட்டுள்ளார்.

Next Post

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்; தமிழக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்..!

Sun Sep 25 , 2022
கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு போன்ற இடங்களில் பாஜக அலுவலகம் மற்றும், நிர்வாகிகள் வீடு, கார், கடைகளுக்கு, பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை தாக்குதல்கள் குறித்தும், தமிழகத்தில் தேச பாதுகாப்பு அச்சறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருக்கிறார்..தமிழகம் முழுவதும் பாஜக […]
அடுக்கடுக்கான புகார்கள்..!! ஆப்பு வைக்கும் டெல்லி தலைமை..!! பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம்..?

You May Like