fbpx

முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு…!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இரண்டாம் கட்டமாக மணீஷ் சிசோடியா டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையில் விளக்கம் திருப்திகரமாக இல்லை என கூறி பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.

இதைத் தொடர்ந்து அவரை மார்ச் 20-ம் தேதி வரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் மணீஷ் சிசோடியாவை, ஏப்ரல் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு காவலில் வைக்க நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், தற்போது ஏப்ரல் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vignesh

Next Post

கொளுத்தும் வெயில்...! 21-ம் தேதி தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் தகவல்...!

Tue Apr 18 , 2023
தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்குதிசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவக்கூடும்‌. இதன்‌ காரணமாக, இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ ஆகிய பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு மற்றும்‌ புதுவையில்‌ […]

You May Like