திண்டுக்கல் அருகே பட்டியலினத்தவருக்கு வாடகைக்கு வீடு கிடையாது என்ற வீட்டு உரிமையாளர் பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயக்கனூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி ஒருவர் சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு வீட்டு வாசலில் நின்று வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். வீட்டு உரிமையாளரான மூதாட்டி அவரிடம் நீங்கள் என்ன சாதி, ? எனக் கேட்டுள்ளார். நான் என்ன சாதி என கேட்கின்றேன் என நீங்கள் தவறாக நினைக்காதீர்கள். சிலர் கிறிஸ்துவை கும்பிடுகின்றார்கள் , அதைத்தான் கேட்டேன் என்கின்றார். நான் பிற்படுத்தப்பட்ட சாதி என அவர் தெரிவித்துள்ளார்…தவறாக நினைக்காதீர்கள், எஸ்.சி. வகுப்பினருக்கு மீறி வீடு கொடுத்தால் எங்கள் குலதெய்வம் ஒத்துக்காது என காரணம் கூறி வீடு கொடுக்க மறுத்துவிட்டார்…
இந்த வீடியோவை அந்த நபர் வெளியிட்டதை அடுத்து … தற்போது வைரலாகி வருகின்றது… சாதி, மதத்தின் அடிப்படையில் வீடு கொடுப்பது பலரை கலங்க வைத்துள்ளது. தென்காசி அருகே கிராமத்தில் ஊரில் பாகுபாடு பார்ப்பதாக புகார் எழுந்தது. தற்போது வாடகைக்கு வீடு கூட சாதி பார்த்துதான் தருகின்றார்கள் என்பது வேதனைக்குரியதாக உள்ளது.