fbpx

குடிக்க தண்ணீர் இல்லை..!! மழைநீரை பிடித்து குடிக்கும் காசா மக்கள்..!!

காசாவில் கனமழை பெய்து வருவதால், தண்ணீர் இல்லாமல் அவதியுற்ற மக்கள், தற்போது மழைநீரை பிடித்து குடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை நீருக்கே தினமும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காசாவில் கனமழை பெய்து காசாவே வெள்ள நகரமாக காட்சியளிக்கிறது. தினமும் குடிநீருக்கே போராடி வந்த மக்கள் மழை நீரை சேகரித்து அதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், காசா முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களையும் உடமைகளையும் இழந்து அவதியுறுகின்றனர்.

குளிரும் கடுமையாக நிலவுவதால், மழை காரணமாக தொற்றுநோய்களும் பரவுகிறது. போரினால் மருத்துமனைகளும் நிரம்பி காணப்படுவதால், இந்த தொற்றுநோய்களுக்கான சிகிச்சைகளையும் பெற முடியாத அவதி நிலையில் காசா மக்கள் உள்ளனர். தொடர்ந்தும் இதே நிலை காணப்பட்டால், கடும் குளிர் மற்றும், சுகாதார வசதிகள் கிடைக்காததால், மக்கள் பலியாகும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

Chella

Next Post

யோகா மாஸ்டருடன் கள்ளக்காதல்… நண்பர்களுடன் சேர்ந்து ஸ்கெட்ச்… நெஞ்சை பதற வைக்கும் கொலை சம்பவம்.!

Thu Nov 16 , 2023
விருதுநகர் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவி கள்ளக்காதலன் மற்றும் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் எதிரே ஸ்வீட் கடை நடத்தி வந்தவர் சிவக்குமார். 43 வயதான இவர் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனது கடையில் […]

You May Like