fbpx

நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2023 ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. for his innovative plays and prose which give voice to the unsayable எனும் புத்தகத்தை எழுதியதற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்தில் அந்தந்த துறைகளில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு, கொரோனா வைரசுக்கு எதிராக எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளை உருவாக்கும் கண்டுபிடிப்புக்காக ஹங்கேரிய அமெரிக்கர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் ட்ரூ வெய்ஸ்மேன் இருவருக்கும் அறிவிக்கப்பட்டது. அணுக்களில் நகரும் போதும், ஆற்றலாக மாறும் போதும் எலக்ட்ரான்களின் இயக்கத்தை, அட்டோசெகண்ட் எனும் மிகமிக குறைவான நேரத்தில் கண்டறியும் ஆய்வுக்காக அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பியர் அகோஸ்டினி, பெரென்ங்க் கிராஸ் மற்றும் அன்னி எல் ஹியூல்லியர் மூவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதேபோல், குவாண்டம் புள்ளிகள் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்பு குறித்த ஆய்வுக்காக 2023ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மவுங்கி பவேண்டி, அமெரிக்காவை சேர்ந்த லூயி புருஸ், ரஷ்யாவை அலெக்செய் எகிமோவு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

Kokila

Next Post

டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டதா..? ஆன்லைனில் மீண்டும் பெறுவது எப்படி..?

Fri Oct 6 , 2023
இந்தியாவில் மோட்டார் வாகனங்களை ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் தேவை. இந்த டிரைவிங் லைசென்ஸ் உரிமம் என்பது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஆர்டிஓ (Regional Transport Office) அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. ஒரு நபர் வாகனம் ஓட்ட விரும்பினால், முதலில் கற்றல் நோக்கத்திற்காக அவருக்கு கற்றல் உரிமம் தரப்படும். இது வெறும் 6 மாத காலமே உள்ள தற்காலிக உரிமமாகும். அதற்கு பிறகுதான், நிரந்தர உரிமம் தரப்படும். […]

You May Like