fbpx

‘மோடியின் அர்த்தத்தை இப்படி மாற்றுங்கள்…’ : ராகுல் காந்தியின் தண்டனைக்கு பிறகு குஷ்புவின் பழைய ட்வீட் வைரல்…

2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கியது.. மேலும் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல்காந்தி நேற்று எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன..

இந்நிலையில், தற்போது பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்பு, காங்கிரஸ் உறுப்பினராக இருந்தபோது 2018 ஆம் ஆண்டு மோடி குறித்து போட்ட ட்வீட் சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.. அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி, மோடி குறித்து குறிப்பிட்டதை போலவே குஷ்புவும் பதிவிட்டிருந்தார். அவரின் ட்வீட்டில், ஒவ்வொரு ஊழல் நபரின் குடும்பப் பெயரும் மோடி என்றும், “மோடி என்றால் ஊழல்” என்றும் அவர் தெரிவித்திருந்தார். ‘மோடி’ என்ற குடும்பப்பெயரின் அர்த்தத்தை இப்போது “ஊழல்” என்று மாற்ற வேண்டும், அது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்…

குஷ்பு போட்ட இந்த ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட்டை காங்கிரஸ் கட்சியினர் பகிர்ந்து வருகின்றனர்.. மேலும் குஜராத் அமைச்சர் பூர்ணேஷ் மோடி இப்போது பாஜக தலைவரும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு சுந்தர் மீது வழக்குத் தாக்கல் செய்வாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த நடிகை குஷ்பு, அரசியல் களத்தில் இறங்கினார். முதலில் திமுகவில் சேர்ந்த குஷ்பு, பிரசாரத்திற்கு அனுப்பப்பட்டார். திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.. பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, கடந்த 2020-ம் ஆண்டு குஷ்பு பாஜகவில் இணைந்தார்.. கடந்த 2021 தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, திமுக வேட்பாளர் எழிலனிடம் தோல்வி அடைந்தார்.. தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு இருந்து வருகிறார்.. மேலும் பாஜக அரசு குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்து வருகிறார்.. அதுமட்டுமின்றி விலைவாசி உயர்வு போன்ற விஷங்களை கண்டித்து மாநில அரசை விமர்சித்தும் வருகிறார்.. குஷ்பு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

பெண்களே கவனிங்க.. தங்கம் விலை இன்று குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

Sat Mar 25 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

You May Like