நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் 1,083 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1,083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 3-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1,083 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வரும் மார்ச் 04-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும். அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மதியம் விதம் 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
