fbpx

TRB: 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு…! 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

இடைநிலை ஆசிரியர்‌ பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்

ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ இடைநிலை ஆசிரியர்‌ – 2024 ஆம்‌ ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கு போட்டித்‌ தேர்வு மூலம்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கு அறிவிக்கை பிப்ரவரி 9-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள்‌ இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்ய 15.03.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம்‌ வழங்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள்‌ பலரும்‌ இணையவழியாக விண்ணப்பம்‌பதிவேற்றம்‌ செய்ய கூடுதல்‌ கால அவகாசம்‌ கோரினர்‌. அதன் அடிப்படையில்‌ மேற்காண்‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசித் தேதி 15.03.2024-ல் இருந்து 20.03.2024 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.

மேலும்‌, விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ (Edit Option) மேற்கொள்ளவும்‌ அவகாசம்‌ வழங்க கோரியதின்‌ அடிப்படையில்‌, இடைநிலை ஆசிரியர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம்‌ செலுத்தியவர்கள்‌ தங்களின்‌ விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ (Edit Option) மேற்கொள்ள விரும்பினால்‌ 21.03.2024 முதல்‌ 23.03.2024 மாலை 5 மணி வரை திருத்தம்‌ செய்யலாம். இதற்காக ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Business | இளைஞர்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Mar 14 , 2024
தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதாவது, இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னையில் 3 நாட்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி […]

You May Like