fbpx

இனி 5 வயது வரையிலான குழந்தைகள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 8,000 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த டவுன் பஸ்களில், 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை. இதை 5 வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

சென்னை புழல் சிறையில்…..! காவலரை தாக்கிய வெளிநாட்டு கைதி….!

Wed May 24 , 2023
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் இருக்கின்ற பெண்கள் சிறையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன இந்த நிலையும் நேற்று முன்தினம் பெண் கைதிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்த்துவிட்டு பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இந்த பொருட்களை உரியவர்களுக்கு வழங்கும் பணியில் சிறை காவலர் அயரின் ஜனட் ஈடுபட்டு வந்தார். அப்போது திருப்பூர் மாநகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like