fbpx

’இனி சாமானிய மக்களும் திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்தலாம்’..!! அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

சாமானிய மக்களும் குறைவான செலவில் திருமணம் செய்யும் வகையில், திருமண மண்டபங்கள் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள், இளைஞர்கள் என பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சாமானிய மக்களும் மிகவும் பிரம்மாண்டமாக திருமணங்களை நடத்துவதற்காக கிராமங்கள்தோறும் திருமண மண்டபங்களை கட்டும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமண மண்டபங்கள் கட்டும் பணி முழுமை அடைந்தவுடன் குறைவான செலவிலேயே பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளிகளில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்டித் தருவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டும் பணி துவங்கப்படும் எனவும் உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

Chella

Next Post

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

Sat Aug 5 , 2023
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ரஹீம் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது கடைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு அதனை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனை தொடர்ந்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து விவரித்த நிலையில், பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு […]

You May Like