பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகள், இந்த சீசனில் முதல் வாரமே நடந்து கொண்டிருக்கிறது. எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர்.
ஆனால், கடைசியில் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பவா செல்லதுரை பெயரை சொன்ன நிலையில், ஒருவர் கூட சொல்லாத அனன்யா ராவ் எவிக்ட் ஆகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எலிமினேட் ஆன பின் கமலிடம் மேடையில் அனன்யா பேசினார். ”நான் இன்னும் அதிக நாட்கள் இருப்பேன் என நினைத்தேன். நான் செய்ய வேண்டியதை செய்தேன். நான் டாட்டூ போட்டதால் தான் எலிமினேட் செய்துவிட்டார்கள் போல” என அவர் பேசினார்.
அதற்கு கமல்ஹாசன் அது காரணமில்லை, வேண்டுமென்றால் இப்போது போய் இன்னும் ரெண்டு டாட்டூ போட்டுகோங்க என கமல் அவருக்கு பதில் கூறி அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.