மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் அல்லது மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிய அவ்வபோது ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தல் பணிகளில் ஈடுபடுபவர்களை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பைக் சாகசம் நடைபெறுவதை கண்டறியும் விதமாக தொழில்நுட்பம் மிகுந்த சைபர் ரோந்து சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.