fbpx

“இனி உங்கள் குழந்தைக்கு ஈசியா ஆதார் எடுக்கலாம்”..!! இதுதான் பிராசஸ்..!!

ஆதார் அட்டை என்பது தற்போது அனைவரும் அவசியமானதாக மாறிவிட்டது. பிறப்பு தொடங்கி வாழ்வின் இறுதிவரை பயணிக்க போகும் விஷயம் என்றால் அது ஆதார் தான். அரசின் அத்தனை சேவைகளுக்கும், அத்தனை திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நாம் இந்த செய்தியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எடுப்பது எப்படி? எங்கே எடுக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நகல்களை எடுங்கள். அப்படியே அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் அல்லது தாலுகா அலுவலகத்திற்குச் சென்று அங்கு கொடுக்கப்படும் ஆதார் பதிவு படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தை 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றால், நீங்கள் தாய் அல்லது தந்தையின் ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர், ஆதார் பதிவு மையத்தில் உங்களது குழந்தையின் புகைப்படத்தை எடுப்பார்கள்.

தொடர்ந்து, குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகல் அல்லது மருத்துவமனையில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்சார்ஜ் சான்றிதழை ஸ்கேன் செய்வார்கள். ஆனால், பெரியவர்களுக்கு எடுப்பது போன்று குழந்தைகளுக்கு அவர்களின் கைரேகைகள் மற்றும் விழித்திரை ஸ்கேன் எடுக்க மாட்டார்கள். இதற்கு மாற்றாக பெற்றோர்களில் ஒருவரின், வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணத்தைக் காட்டி கைரேகை எடுத்துக் கொள்வார்கள். பின்னர் ஆதார் நிர்வாகி பதிவு எண் அடங்கிய ஒப்புகை சீட்டை உங்களிடம் வழங்குவார்கள்.

அவ்வளவு தான். எளிதாக புதிய ஆதார் விண்ணப்பிக்கும் பணி நிறைவு பெறும். இதனையடுத்து நீங்கள் அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து உங்களது குழந்தையின் ஆதார் அட்டையின் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய ஆதார் அட்டை உங்கள் வீட்டிற்கே வந்துவிடும். உங்கள் குழந்தைகளின் ஆதார் எண்ணை எடுத்த பின்னர், அதனை எடுத்து இ-சேவை மையத்திற்கு சென்று எளிதாக நீங்கள் உங்கள் குழந்தையின் பெயரை குடும்ப அட்டையிலும் சேர்க்கலாம். குடும்ப அட்டையில் உங்கள் குழந்தையின் பெயரை சேர்க்க அதிகபட்சம் 20 நாட்கள் ஆகும். நீங்களே கூட ஆன்லைன் மூலம் குழந்தையின் பெயரை சேர்க்கலாம்.

Chella

Next Post

”குறைந்து வரும் சூரியனின் எரிபொருள்”..!! ”பூமியை விழுங்கும் அபாயம்”..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Thu Sep 21 , 2023
நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்வி எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இதற்கான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல சூரியன் பற்றிய ஆய்வும் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு […]

You May Like