fbpx

சிக்கன் சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி பலி..!! 20 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..!! நடந்தது என்ன..?

கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட பின்னர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ரஷ்மி (33). அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அல்ஃபாமா சிக்கன் மற்றும் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். இதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல்நிலை மோசமானதால் பின்னர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிக்கன் சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி பலி..!! 20 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..!! நடந்தது என்ன..?

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ரஷ்மி மரணமடைந்தார். இது றித்து அறிந்த சுகாதாரத் துறையினர் ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதே ஓட்டலில் சாப்பிட்ட மேலும், 20 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோட்டயம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

#Breaking..!! இனி திரையரங்குகளில் இது இலவசம்..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tue Jan 3 , 2023
திரையரங்கிற்குள் இலவச குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை திரையரங்கிற்குள் கொண்டு வரலாம் எனும் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், திரையரங்கு என்பது […]

You May Like