fbpx

நைட் டியூட்டிக்கு வந்த நர்சிங் மாணவி..!! பாசத்தை பொழிந்த தலைமை மருத்துவர்..!! 10 மணிக்கு நடந்த பயங்கரம்..!!

சென்னையில் நைட் டியூட்டி வந்த நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். அகாடமி பரிந்துரையின் பேரில் நர்சிங் மாணவி நைட் டியூட்டி பயிற்சியாக அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு 10 மணியளவில் மாணவி அந்த தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றச் சென்றுள்ளார். 

நைட் டியூட்டிக்கு வந்த நர்சிங் மாணவி..!! பாசத்தை பொழிந்த தலைமை மருத்துவர்..!! 10 மணிக்கு நடந்த பயங்கரம்..!!

அப்போது, மருத்துவமனையின் உரிமையாளரும் தலைமை மருத்துவருமான விவேகானந்தன் மாணவியை தனி அறைக்கு அழைத்து குடும்ப விவரங்கள் குறித்து விசாரித்துள்ளார். பின்னர் உன்னையும், உனது குடும்பத்தையும் இனி நான் பார்த்துக் கொள்கிறேன். மருத்துவமனையிலேயே உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன் எனக்கூறி மாணவியின் கையைப் பிடித்து தவறாக நடக்க முயன்றள்ளார். இதனால், பதறிப்போன மாணவி கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதேபோல், அடிக்கடி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த மாணவி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Chella

Next Post

கொடூரம்!!! 4ஆம் வகுப்பு மாணவிக்கு முகத்தில் சூடு வைத்த தலைமை ஆசிரியை!!!

Fri Dec 23 , 2022
திருவண்ணாமலை அடுத்து மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை என இருவர் பணிபுரிந்து வருகின்றனர், இந்நிலையில் நேற்று நான்காம் வகுப்பு பயிலும் கெடாத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் மணிமேகலை தம்பதியினரின் மகள் கௌதமி சரிவர படிக்கவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியை உஷாராணி தீக்குச்சியை பற்றவைத்து கௌதமி முகத்தில் சூடு […]

You May Like