fbpx

துபாயில் முகேஷ் அம்பானி வாங்கிய விலை உயர்ந்த பங்களா.. என்னென்ன வசதிகள் உள்ளது..?

உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.3 பில்லியன் டாலர் ஆகும்.. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.. முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் மும்பையில் உள்ள பங்களாவில் வசித்து வந்தாலும், அவர் பல வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்..

அந்த வகையில் தற்போது துபாயில் உள்ள பாம் ஜுமேரா தீவில் முகேஷ் அம்பானி மிகப்பெரிய பங்களாவை வாங்கி உள்ளார்.. தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக அவர் இந்த பங்களாவை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு சுமார் 90 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.643 கோடி ஆகும்..

33,000 சதுர அடியில் கட்டுப்பாட்டுள்ள இந்த பங்களாவில் 10 படுக்கை அறைகள், 7 ஸ்பாக்கள், 2 நீச்சல் குளங்கள் உள்ளன.. கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த பங்களாவை ரிலையன்ஸ் குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று பராமரிக்கும் என்று கூறப்படுகிறது..

பனை மர வடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவில் ஏற்கனவே பல பிரபலங்கள் வீடுகளை வாங்கி வருகின்றனர்.. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரிட்டன் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் அங்கு வீடுகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

KVB தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Mon Aug 29 , 2022
கரூர் வைஸ்யா வங்கியில் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Sales Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.16,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like