fbpx

ஒடிசா ரயில் விபத்து..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்..!! ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம்..!!

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

பள்ளி ஆசிரியையை வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசம்..!! ரூ.25 லட்சத்தை சுருட்டிய தொழிலதிபர்..!!

Sun Jun 4 , 2023
கோவை மாவட்டம் கோட்டைமேட்டை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு, அவர் பணிபுரியும் பள்ளியில் உடன் பணியாற்றும் சரவணம்பட்டியை சேர்ந்த சக ஆசிரியை ஒருவர் மூலமாக சந்தோஷ்குமார் (42) என்ற தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக சந்தித்த பிறகு செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு […]

You May Like