பிக்பாஸ் 7-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இதில், கூல் சுரேஷ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து தனது நடவடிக்கைகளால் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஃபன் மெட்டீரியலாக மாறியிருக்கிறார். குறிப்பாக, பவா செல்லதுரை ஓட்டம் கதையை சொல்லி முடித்த பிறகு தனது மனைவியை நினைத்து சுரேஷ் உருகிய சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே, எப்போதும் இல்லாத மாதிரி இம்முறை 2-வது நாளிலேயே எவிக்ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் பவா செல்லதுரை, அனன்யா, ஜோவிகா, பிரதீப்உள்ளிட்ட 7 பேர் இருக்கின்றனர். இவர்களில் யுகேந்திரனும் பிரதீப்பும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முதல் வாரத்திலேயே எவிக்ஷன் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் ரசிகர்களிடையே இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 7 வழக்கத்திற்கு மாறாக ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம், சண்டை சச்சரவு என நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. அந்தவகையில், இந்தவார டாஸ்க்காக ‘பாப்புலாரிட்டி டாஸ்க்’ கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பேசுகையில், பிரதீப் ஆண்டனி தனக்கு மனநோய் இருப்பது குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “பிக்பாஸுக்கு வரும் முன் எனது சோசியல் மீடியா பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு தான் வந்தேன்” என்றார். ஏனெனில் எனக்கு ஓசிடி இருப்பதால் எனக்கு வரும் request களை decline கொடுத்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும்” என்றார். எனவே, ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதுமட்டுமின்றி அதுகுறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து போகின்ற ஓசிடி எனும் மனநோய் பிரதீப்பிற்கும் இருப்பது இதன் மூலமாக தெரியவந்துள்ளது.