fbpx

புதருக்குள் இழுத்துச் சென்று மூதாட்டி பாலியல் பலாத்காரம்..!! வடமாநில இளைஞர்களா..? அதிர்ச்சியில் கிராம மக்கள்..!!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயது மூதாட்டி. இவர், நேற்று முன்தினம் மாலை சென்னங்கரணி கிராமத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, ​​இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கரைக்கு சென்ற மூதாட்டியை மர்ம நபர் நோட்டமிட்டுள்ளார். இதையடுத்து, மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மூதாட்டி வலியால் அலறி துடித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர், மூதாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர், சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் பலத்த காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு, ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூதாட்டியை, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரிடம் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். மூதாட்டி சென்ற பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், வடமாநில இளைஞர்கள் பலர் உள்ளனர். இதனையடுத்து, வடமாநில இளைஞர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ”நீங்க எல்லை மீறி வந்துட்டீங்க”..!! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது..!! படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை..!!

English Summary

He dragged the old woman into the bushes and raped her. The shocked old woman screamed in pain.

Chella

Next Post

குளிரில் 'எலக்ட்ரிக் போர்வை' பயன்படுத்துகிறீர்களா?. இது பாதுகாப்பானதா?. நிபுணர்கள் கூறுவது என்ன?

Thu Jan 9 , 2025
Do you use an 'electric blanket' in the cold? Is it safe? What do the experts say?

You May Like