fbpx

”இன்னும் 3 மாதங்களில் தேங்காய் நார் சாலையாக மாறுகிறது OMR சாலை”..!! எதற்காக தெரியுமா..?

மாமல்லபுரம் சாலை, புதுச்சேரி செல்ல சூப்பர் ரூட் என்றே சொல்லலாம். இந்த சாலைக்கு ”ராஜிவ் காந்தி சாலை” என்ற அதிகாரப்பூர்வ பெயரும் உண்டு. ஆனால், நாம் OMR என்று அழைத்தே பழக்கப்படுத்தி கொண்டோம். சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி மாமல்லபுரம் அருகே முடிவடைகிறது ஓல்டு மகாபலிபுரம் சாலை. இந்த வழித்தடத்தில் தான் மறைந்த கருணாநிதியின் கனவு திட்டமான டைடல் பார்க் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது.

இதேபோல் ஓ.எம்.ஆர். சாலை நெடுகிலும் ஏராளமான ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. ஓ.எம்.ஆர். சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். முன்பு சென்னையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையை தான் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தன. ஆனால், செங்கல்பட்டு வழியாக திருச்சி, சேலம், மதுரை செல்ல திருப்போரூர் ரூட்டை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருப்போரூர் வழித்தடம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாலை பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர மழைக் காலங்களிலும் வெள்ளத்தால் ஓ.எம்.ஆர். சாலை பாதிக்கப்படுகிறது. போதிய மழைநீர் வடிகால் வசதிகளும் இல்லை. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் புதுமையான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் படி புதிதாக ஒரு விஷயத்தை கையிலெடுத்துள்ளனர். சாலையின் இருபுறங்களிலும் தேங்காய் நார் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேங்காய் நார்களை கொண்டு புல்தரை போன்ற சாலை கட்டமைப்பை இருபுறமும் ஏற்படுத்தி விட்டால், மண் அரிப்பு ஏற்படாது. சாலையின் இருபுறமும் உள்ள சாய்வான பகுதி பாதுகாக்கப்படும்.

மேலும், வெள்ள பாதிப்புகளாலும் ஓ.எம்.ஆர். சாலை பாதிக்கப்படாது. இதற்காக தான் தேங்காய் நார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வரையிலான 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.95 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் சாலையின் சரிவில் 100 மில்லிமீட்டர் அளவிற்கு மண் சேர்த்து தடிமன் ஆக்கப்படும். அதன்மீது தேங்காய் நார் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் அடுத்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”நீ மட்டும் அவன் கூட ஜாலியா இருக்கலாம்... நான் இருக்கக் கூடாதா”..? தாயின் கள்ளக்காதலனுடன் மகளும் உல்லாசம்..!!

Sun Sep 3 , 2023
குஜராத் மாநிலம் குச் பகுதியில் ஹாமிமோர் கடற்கரையில் பாதி புதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும் அந்த பெண் யார் என்பது குறித்தோ, அவரை எதற்காக கொலை செய்தனர் என்பது பற்றியோ சிறு துப்பும் துலங்கவில்லை. மேலும், சடலத்தை புகைப்படம் எடுத்து கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்களில் ஓட்டி அனுப்பி, தகவல் தெரிந்தால் உடனே போலீசிடம் கூறும்படி, கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், […]

You May Like