fbpx

”அக்.1ஆம் தேதி அனைவரும் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும்”..!! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!!

செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ‘சுகாதார சேவை’ என்ற பெயரில் நாடு முழுவதும் மாபெரும் தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பிரச்சாரம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம், நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு மெகா துப்புரவுப் பணியில், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனித்துவமான அழைப்பை விடுத்துள்ளார். அக்டோபர் 1ஆம் மெகா துப்புரவு பணி நடக்கிறது. நாடு முழுவதும், சந்தை பகுதிகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் சுத்தம் செய்யப்படும்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு நகராட்சி, பஞ்சாயத்து, சிவில் விமான போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற மத்திய அரசு துறைகள் மற்றும் பொது நிறுவனங்கள் தூய்மைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனியார் அமைப்புகள் இவற்றை நடத்துவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”ரூ.1000 உரிமைத்தொகை”..!! ”எங்களுக்கு மரியாதையே தர மாட்றாங்க... அலையவிடுறாங்க”..!! குமுறும் பெண்கள்..!!

Mon Sep 25 , 2023
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு திட்டத்தின் தொடக்க நாளாக கடந்த 15ஆம் தேதி அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. சில மகளிரின் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படாததால் தொகை வரவு வைக்க இயலாத நிலை உள்ளது. இதனை சரி செய்து அவர்களின் வங்கி கணக்குகளுக்கும் விரைவில் உரிமைத்தொகை வரவு வைக்க அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவர்கள் […]

You May Like